JUSTIN || ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம் அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் நீதி வழங்க கோரியும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஜாமினில் விடுவிக்க தடை விதிக்க கோரியும் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவரது மனைவி பொற்கொடிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் நீதி வழங்க கோரியும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஜாமினில் விடுவிக்க தடை விதிக்க கோரியும் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவரது மனைவி பொற்கொடிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5--ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளளர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளை எனவே. இந்த வழககை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் சுகோதரர் கிளோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிக் கடந்த 24-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும், ரத்துச் செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க கடந்த 10-ஆம் தேதி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது