சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைமையகமான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அவர் தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும், "மனித உரிமைகளைப் பரப்புதல் - உலகளாவிய கல்வியின் சக்தி" என்ற கருப்பொருளின்கீழ், ஜோஸ் சார்லஸ் மார்டின் ஐ.நா.வில் உரையாற்றினார். அவரது புதிய கட்சி அறிவிப்பு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.