சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், பிரிந்திருக்கும் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து அண்ணாமலை முயற்சிப்பது குறித்த கேள்விக்கு அவர் இந்த பதிலைக் கூறினார்.