இரைச்சலோடு பெய்த சூறைக்காற்று கனமழை - NH-ல் அப்படியே நின்ற வாகனங்கள் | Fengal Cyclone | TN Rains

Update: 2024-12-01 07:42 GMT

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண முகாம் குறித்து கண்காணிப்பு அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய நிலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்