Selfie-யால் வந்த வினை.. தண்ணீருக்குள் தத்தளித்த 7 ஐடி ஊழியர்கள்

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஐ.டி. ஊழியர்கள் அரியாங்குப்பத்தில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் ஏழு பேர், படகு சவாரி செய்த போது, செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து ஏழு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவ்வழியாக மற்றொரு படகில் வந்தவர்கள், அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com