குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.