சமூகச் சீர்திருத்தவாதி ஜோதி ராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிய ‘புலே எனும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது... இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப், “நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது". என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.