கத்தி, பீர் பாட்டில்களோடு.. வீடு புகுந்து நடந்த பயங்கரம்.. சென்னையில் பரபரப்பு

Update: 2022-12-18 08:42 GMT

சென்னை கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில், முன்பகை காரணமாக இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவலிங்கபுரம் இளைஞர்களுக்கும், புதூர் பகுதி இளைஞர்களுக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சிவலிங்கபுரத்தை சேர்ந்த அருள்தாஸ் என்பவரது வீட்டிற்குள், கத்தி, பீர் பாட்டில்களோடு புகுந்த 10க்கும் மேற்பட்ட புதூர் பகுதி இளைஞர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்