வேனில் போகும்போதே கண்ணில் பட்டவர்களை வெறிகொண்டு தாக்கிய கொடூர இளைஞர்கள்..துரத்திய பொதுமக்கள்..ஸ்டேஷனில் பம்மிய கும்பல்

Update: 2023-06-27 06:26 GMT

காரைக்காலில் ஆணழகன் போட்டியில் பங்கேற்றுவிட்டு, சீர்காழிக்கு வந்த நபர்கள், கடை ஒன்றை சேதப்படுத்திவிட்டு, கண்ணில் தென்பட்ட பொதுமக்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்த 18 பேர் காரைக்காலில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு, சீர்காழி அருகே கருவிழந்த நாதபுரம் வழியாக சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் திராட்சைப்பழம் வாங்கும்போது, விலை அதிகமாக இருப்பதாக கூறி கடையை கடை உரிமையாளரை தாக்கி விட்டு கடையையும் சேதப்படுத்திவிட்டு, வேனில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். அவர்களை சினிமா பாணியில் பொதுமக்கள் துரத்திய போது, வேனியில் இருந்தவர்கள் கட்டையால் சாலையில் நடந்து சென்றவர்கள் பைக்கில் சென்றவர்கள் என கண்ணில் பட்டவர்கள் எல்லாரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், அந்த பகுதி முழுவதும் பதற்றமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்