போலி ஆவணம் கொடுத்த வி.ஏ.ஓ... உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த கிராமத்தினர் - தென்காசியில் பரபரப்பு

Update: 2023-03-10 14:08 GMT

தென்காசி அருகே நிலத்திற்கு போலி ஆவணம் கொடுத்த புகாரில் கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக் கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.பி.நாடானூரில் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த சுதர்சன், நிலங்களுக்கு போலி ஆவணங்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பணிமாற்றம் செய்யகோரி கிராம மக்கள் மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காதத்தால், கோவிலுனுள் திரண்ட கிராமத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்