"வதந்தி பரப்புவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக" - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Update: 2023-03-05 10:42 GMT

சட்டம், ஒழுங்கை குலைக்கும் விதமாக வதந்தி பரப்புவோரை, அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லையென, தலைச்சிறந்த தமிழர்கள் மீது வதந்தி பரப்புவது கண்டனத்திற்குரியது என தெரிவித்த அவர், பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்