- கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு சீனாவும், சர்வதேச நாணய நிதியமும் முடிவு செய்துள்ளன.
- இலங்கை அரசு கடன் சுமையில் மீண்டு வருவதற்காக நீண்டகால அடிப்படையில் கடனுதவி வழங்க இருப்பதாக சீனாவின் எக்சிம் வங்கி கடந்த 6-ஆம் தேதி அறிவித்தது.
- அதைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியமும், இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
- வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஐ.எம்.எப். கூட்டத்தில், இலங்கைக்கு 290 கோடி டாலர் கடன் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.