பணிபுரியும் நிறுவனத்துக்கே விபூதி.. 3 அதிகாரிகளின் அதிர்ச்சி செயல் - ஆடி போன நகைக்கடன் office

Update: 2023-06-09 15:32 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக்கடன் வழங்கும் கிளை நிறுவனத்தில், தலைமை மேலாளராக ஏழுமலை, உதவி தலைமை அலுவலராக சின்ராஜ், இளநிலை உதவியாளராக ராஜசேகர் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில், வருடாந்திர தணிக்கை நடைபெற்றது. அப்போது, ஏழுமலை உட்பட 3 பேரும், வாடிக்கையாளர்கள் நகைக்கடன் பெற்றதுபோல் போலி ஆவணங்களை தயாரித்தும், லாக்கரில் இருந்த அசல் நகையை எடுத்துவிட்டு போலி நகைகளை வைத்து கையாடல் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த அந்நிறுவனத்தின் வட்டார மேலாளர் சமதகிரி அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, ஏழுமலை, சின்ராஜ், ராஜசேகர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்