'அம்மாடி 91 வயதா இவருக்கு..!' தள்ளாடும் வயசுல தலைக்கு மேல கரும்பு... தங்க மகளுக்காக.. தந்தையின் சீர்

Update: 2023-01-15 03:46 GMT

91 வயதான முதியவர் ஒருவர், கரும்புகளைத் தூக்கிக் கொண்டு 17 கிலோமீட்டர் சென்று மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மகள் சுந்தராம்பாளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

பின்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

அன்று முதல் இன்று வரை தமது மகளுக்கு பொங்கல் சீர் வழங்கி வருகிறார். இதைப் பார்த்து வியப்படையும் பொதுமக்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்