சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் .. அடுத்த நொடியில் நடந்த விபரீதம் - வெளியான சிசிடிவி காட்சி

Update: 2022-12-07 04:29 GMT

கேரளாவில் கவன குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது, கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் பூக்களத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையின் குறுக்கே கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த கார் பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிதுடன், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.

இந்த விபத்தில், சாலையை குறுக்காக கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தில் சென்ற தாசன் என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்