'மாஸ்டர்' பட பாணியில் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 4 சிறுவர்கள்..!

Update: 2023-04-23 02:50 GMT

ராணிப்பேட்டையில் மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசினர் சிறுவர்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த காப்பகத்திலிருந்து நான்கு சிறுவர்கள், காயவைத்த துணிகளை எடுத்து வருவதாக கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து காப்பகத்தின் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்