இந்து கடவுள்கள் விநாயகர், பார்வதியை கொச்சைப்படுத்தி ஆடியோ? - நபர் மீது பாய்ந்த வழக்கு

Update: 2022-09-02 04:44 GMT

உடுமலையில் இந்துக் கடவுள்களான விநாயகர் மற்றும் பார்வதியை கொச்சைப்படுத்தி ஆடியோ வெளியிட்டவர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"புக்குளம் 7 1/2 " என்ற வாட்ஸ்ஆப் குரூப்பில் புக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மூன்று ஆடியோக்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் இந்துகடவுள்களான பார்வதி தேவிமற்றும் விநாயகரை கொச்சைபடுத்தியதோடு அதற்கு ஒரு விழா தேவை தானா எனவும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
 இது குறித்த புகாரைத்தொடர்ந்து, அவர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்