மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு - ரூ.18 லட்சம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2023-02-25 07:14 GMT

சென்னை வந்துள்ள இந்தியா, இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்தனர்.

தர்பார் மண்டபத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தலா 18 வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

இரு அப்போது இரு அணி வீரர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஆளுநர், இலங்கை அணிக்கு 10 லட்ச ரூபாயும், இந்திய அணிக்கு 8 லட்ச ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

ஆளுநரின் அறிவிப்பால் நெகிழ்ச்சியடைந்த இந்திய, இலங்கை வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்