போலீஸ் பாதுகாப்பில் இருந்தவரை புரட்டி எடுத்த கும்பல்... செய்வதறியாது திக்குமுக்காடிய போலீசார்

Update: 2023-02-28 10:07 GMT

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் காவல்துறை பாதுகாப்பில் சென்ற நபரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் பைரி நரேஷ்.

பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், ஹனம்கொண்டா பகுதியில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

பின்னர் காவல்துறையினர் வாகனத்தில் சென்ற போது, ஒரு கும்பல் காவல் வாகனத்தில் ஏறி சரமாரியாக தாக்கியது.

காவலர்கள் தடுத்த போதும், வாகனத்திற்குள் புகுந்து தாக்கினர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஈடுபட்டதாக பைரி நரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்