விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் வழக்கை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்

Update: 2022-09-01 15:07 GMT

இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது, உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்