சுருளி அருவியில் திடீர் வெள்ள பெருக்கு - கட்டுக்கடங்காமல் ஓடும் வெள்ளம்

Update: 2023-05-28 03:46 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பெய்த கனமழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சின்ன சுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில், நீர் வரத்து குறைந்தால் மட்டுமே, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்