ஆற்றில் குளித்த போது மாயம் சோகத்தில் மூழ்கிய குடும்பம் - அடுத்து நடந்த திடீர் டுவிஸ்ட்

Update: 2022-11-24 04:06 GMT

விருத்தாச்சலம் அருகே குளிக்க சென்ற போது காணாமல் போனவர் திடீரென வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கார்கூடல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் அங்குள்ள மணிமுக்தாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அவர் வீடு திரும்பாததால் ஆற்றில் அடித்து சென்றிருக்கலாம்

என உறவினர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் தீவிரமாக தேடி வந்த நிலையில் காணாமல் போன செல்வராஜ் கிராமத்திற்கு மீண்டும் வந்தார்.

இதனால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்