கள்ள நோட்டை மாற்ற முயன்ற வழக்கு...3 பேர் சிறையில் அடைப்பு - மேலும் சிக்கிய 2 பேர்...ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

Update: 2023-01-09 09:13 GMT

விருதுநகரில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கில் 5 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கில் சுப்புத்தாய் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், மகள் துரைச்செல்வி மற்றும் அவரது தங்கை கணவர் பாலமுருகனுடன் சேர்ந்து கள்ள நோட்டினை கைமாற்றும் வேலைகளில் சுப்புத்தாய் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில், பாலமுருகன் அளித்த தகவலின் அடிப்படையில், அருண் மற்றும் நவீன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனர் மற்றும் பிரிண்டர் மெஷினை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் மொத்தம் 5 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்