பிணத்தை எரிக்க முடியாமல் தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Update: 2022-09-08 10:59 GMT

பிணத்தை எரிக்க முடியாமல் தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தர்மபுரி அருகே சுடுகாட்டில் தேங்கிய மழை நீரால், உயிரிழந்தவரின் சடலத்தை எரிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக சுடுகாட்டில் மழை நீர் தேங்கியது. இதனால் உயிரிழந்தவரின் சடலத்தை எரிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த மக்கள், சுடுகாட்டில், நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்ததால், சுடுகாட்டில் தண்ணீர் தேங்கியதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்