#Breaking|| ஹனிமூன் போட்டோஷூட்டில் சென்னை டாக்டர் தம்பதி பரிதாப பலி.. திருமணமான 1 வாரத்தில் பாலி தீவில் பயங்கரம்

இந்தோனேசியாவில் தேனிலவு சென்ற சென்னையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Update: 2023-06-09 19:35 GMT

பலியானவர்கள் சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த டாக்டர்கள் விபூஷ்னியா, லோகேஸ்வரன் என கூறப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி டாக்டர் விபூஷ்ணியா, டாக்டர் லோகேஸ்வரனுக்கு பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது.

இதன்பின் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

அங்கு படகில் போட்டோஷூட் நடத்தியபோது, இருவரும் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் லோகேஸ்வரன் உடல் மீட்கப்பட்ட நிலையில், வி​பூஷ்னியா உடலை தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்