ரூ.18,000 கோடி கடன் பெறும் ஏர் இந்தியா... பழைய கடன்களை திருப்பி செலுத்த புதிய கடன்

Update: 2023-02-08 06:27 GMT

ஏர் இந்தியா நிறுவனம் எஸ்.பி.ஐ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளிடம் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது.

இவை ஒரு ஆண்டு காலத்திற்கு அளிக்கப்படும் கடன்களாக இருக்கும்.

பழைய கடன்களை திருப்பி செலுத்த இந்த தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

டாடா குழுமம் ஏர் இந்தியாவை கையகப்படுத்தி ஒரு ஆண்டு முடிடைந்துள்ள நிலையில், அதன் வசம் உள்ள விமானங்கள் எண்ணிக்கை 100ஆக, 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

விமானப் பயணிகள் தினசரி எண்ணிக்கை 72 சதவீதமும், தினசரி வருவாய் அளவு இரு மடங்காகவும் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்