திடீரென பலமாக வீசிய சூறைக்காற்று.. காற்றோடு பறந்து மின்கம்பத்தில் சிக்கிய மேற்கூரை

Update: 2023-07-05 02:46 GMT

சங்கரன்கோயிலில் சூறைக்காற்றால் தூக்கி வீசி எறியப்பட்ட தகர மேற்கூரை மின்கம்பத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவிலில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளிக்காற்று வீசி வந்தது. இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே உள்ள சலூன் கடை ஒன்றின் மேற்கூரை, காற்றில் பறந்து மின்கம்பம் ஒன்றின் மீது விழுந்தது. இதனையடுத்து விரைந்து வந்த மின் துறை ஊழியர்கள் கிரேன் மூலம் தகரக்கூரையை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்