டீ பிரியர்களுக்கு ஒரு ஷாக் தகவல்..!

Update: 2023-06-17 01:56 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பேரில், டீத்தூளை போலியாக தயாரித்து விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

புவனகிரியில் இயங்கி வரும் கடை ஒன்றில், தனது நிறுவத்தின் பேரில் போலி டீ தூள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்தில் அந்நிறுவனத்தின் சென்னை மேலாளர் புகார் அளித்தார். புகாரின் பேரில், அந்த கடையில் சோதனை மேற்கொண்ட போலீசார் போலி டீ தூளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் கோவிந்தராஜூலு, பன்னீர்செல்வம், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்