3 நாள் வாசனை பொருள் கண்காட்சி..ஆஸ்கர் யானையின் மாதிரி உருவம்

Update: 2023-05-11 10:17 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு வாசனை பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாசனை பொருள்கள் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. இதில், ஆஸ்கர் வென்ற the elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளை, கவுரவிக்கும் விதமாக மாதிரி உருவம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடலூரில் விளையக்கூடிய லவங்கம், கசகசா, மிளகு, சீரகம், உள்ளிட்ட பல பொருள்கள் நிறைந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்