230 பெண்களை மணக்க 14,000 ஆண்கள்.. கல்யாண வரன் நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் | Wedding | Crowd

Update: 2022-11-15 05:49 GMT

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், 230 பெண்களை மணக்க 14 ஆயிரம் விண்ணப்பித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில், ஒரு பிரிவு சமுதாயத்தினருக்கான கல்யாண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 230 பெண்கள் மணமகன் தேவை என இந்த வரன் பார்க்கும் நிகழ்வில் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இந்த பெண்களை மணக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது. இந்நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். 230 பெண்களை மணக்க, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்