ஊக்கமருந்து சர்ச்சை... 1 மணிநேரம் நடந்தது என்ன..? பஜ்ரங் புனியா பரபரப்பு விளக்கம்

Update: 2024-05-10 12:09 GMT

ஊக்கமருந்து தடுப்பு சோதனைக்கான மாதிரியை வழங்க, தான் ஒருபோதும் மறுத்ததில்லை என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் முறையான பரிசோதனை உபகரணங்களை கொண்டு வரவில்லை என்றும், மூன்று சோதனை கருவிகளுக்கு பதிலாக ஒரே ஒரு சோதனை கருவியை எடுத்து வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் தன்னை அணுகிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகே, தான் வெளியேறியதாகவும், உடனடியாக வெளியேறியதாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் பஜ்ரங் புனியா விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்