தாகத்தில் தவித்த கோலா கரடி : சைக்கிளில் ஏறி அமர்ந்து தாகம் தணிப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் வெப்ப நிலை அதிகரித்துள்ள நிலையில், அன்னா ஹேஸ்லெர் என்ற பெண்மணி, அந்த பகுதியில் தன் நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2019-12-28 20:35 GMT
தெற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் வெப்ப நிலை அதிகரித்துள்ள நிலையில், அன்னா ஹேஸ்லெர் என்ற பெண்மணி, அந்த பகுதியில் தன் நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அடிலெய்டு காடுகளின் வழியே செல்லும் போது, ஒரு கோலா கரடி சாலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அந்த குழுவினர் சைக்கிளை நிறுத்திய போது, கோலா கரடி ஒன்று ஓடி வந்தது. அதற்கு தண்ணீர் கொடுத்த போது, சைக்கிள் ஒன்றில் ஏறி தண்ணீர் குடித்தது. அந்த காட்சி தங்களை மிகவும் பாதித்ததாக அன்னா ஹேஸ்லெர் தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்