கைகள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-07 03:03 GMT
இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மனித புதைகுழியிலிருந்து பெண்ணின் மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மனித எலும்புக்கூடுகள் மற்றும் தடயப் பொருட்கள் மீட்கப்பட்டு வருவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்