"லைசைன்ஸ் இங்கே.. என் பைக் எங்கே?"... பைக் கேட்டு அடம்பிடித்து தள்ளாடிய மதுப்பிரியர் - தவித்த போலீசார்

Update: 2023-09-02 11:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடி பகுதியில், போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்திய போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபர் பைக் கேட்டு அடம்பிடித்ததால், ஓட்டுநர் உரிமத்தை கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறி கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போலீசார் சற்றும் எதிர்பாராத விதமாக, சிறிது நேரத்திலேயே ஓட்டுநர் உரிமத்துடன் வந்த அவர், தனது பைக்கை தரும்படி மீண்டும் அடம்பிடிக்க தொடங்கினார். அவர் போதையில் இருந்ததால், போலீசார் இருசக்கர வாகனத்தை தர மறுத்த நிலையில், திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட தொடங்கினார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஓய்ந்த நிலையில், அந்த வழியே சென்ற பொதுமக்களும் அவரை சமாதானம் செய்தனர். ஒரு வழியாக அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்