`3 ஆண்டு' `ரூ.780 கோடி' - வெளிவந்தஅதிர வைக்கும் தகவல்கள்

Update: 2024-05-09 02:19 GMT

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் நடைபெறுவதை

தடுக்கும் வகையில் சுங்க துறையினர் மற்றும் பிற விசாரணை

அமைப்புகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 780 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நடப்பாண்டில் 440 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் போதை பொருளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதே போல கடந்த ஆண்டில் 192 கோடியும், 2021 ம் ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கமும் , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  

Tags:    

மேலும் செய்திகள்