பிரபல ஈமு கோழி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் ஏலம் - அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-05-10 02:04 GMT

பிரபல ஈமு கோழி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் ஏலம் - அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்

ஈரோட்டில் பிரபல ஈமு கோழி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்கள், பொது ஏலத்தின் மூலம் 4.49 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில், ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்திருந்தனர். ஆனால், அந்நிறுவனம் கூறிய படி முதலீட்டார்களுக்கு பணத்தை திருப்பி தராததால் உரிமையாளரை கைது செய்ததோடு அசையா சொத்துக்களையும் முடக்கினர். இந்த சொத்துக்கள் தற்போது பொது ஏலத்தின் மூலம் 4.49 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்