தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி | Dengue Fever | Tenkasi

Update: 2024-01-21 02:00 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவர் உயிரிழந்தார். நெல்லையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் அஸ்வந்த், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தான். மேலும், ஆலங்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம், புதுப்பட்டி, பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் காய்ச்சல் பரவுவால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.அந்த பகுதிகளில் உடனடியாக சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்