12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-02-22 11:20 GMT

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அரசுத்துறை பல்வேறு ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் விடைத்தாள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தாள் மற்றும் விடைத்தாள் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும், தேர்வு நடைபெறும் நாட்களுக்கு ஏற்ப அந்தந்த பாடங்களுக்குரிய விடைத்தாள்கள் தனித்தனியாக கட்டப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளன. தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்Class 12 Public Examination - Released Information

Tags:    

மேலும் செய்திகள்