ரூ.300 கோடி சொத்துக்கள் ஏமாற்றம்..அதிர்ந்து போன கோவை தொழிலதிபர்...ஒரே குடும்பம் போட்ட மெகா ஸ்கெட்ச்

Update: 2024-04-18 08:25 GMT

#thanthitv #coimbatore #businessmen #peelamedu

ரூ.300 கோடி சொத்துக்கள் ஏமாற்றம்

அதிர்ந்து போன கோவை தொழிலதிபர்

ஒரே குடும்பம் போட்ட மெகா ஸ்கெட்ச்

மிரண்டு நிற்கும் தொழிலதிபர்கள்

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர், சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர். இதனை அறிந்த சிவராஜ், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடியில் வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்தனர். முக்கிய நபரான அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா மற்றும் மருமகன் சக்தி சுந்தர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை அபகரித்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்