பிரபல தொழிலபதிபர் வீட்டில் சிக்கிய ரூ.4.8 கோடி.. ஓட்டுக்கு வைத்திருந்த பணமா? - அதிரவிடும் காட்சிகள்

Update: 2024-04-04 05:19 GMT

#namakkal #itraid

நாமக்கல்லில், தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vovt

நாமக்கல் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில், 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறையினர் நாமக்கல் எஸ்.பி.ஐ. வங்கியில் ஒப்படைத்துள்ளனர். மேலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்