கோவில் திருவிழாவில் அடாவடி - திடீரென பறந்த பெட்ரோல் குண்டு - போதை கும்பலின் வெறியாட்டம்

Update: 2024-04-24 11:04 GMT

சென்னை கே.கே. நகரில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆறுமுகம் என்ற நபரிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியபோது, அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை வீச முயன்றதுடன், மணிகண்டன் என்பவரை கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தப்பிய 3 பேரில் 2 பேரை பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கைதானவர் கே.கே. நகரைச் சேர்ந்த ரவுடி கோபி மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பியோடிய சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்