150 கோடி..! மாணிக்க கல்னு சொல்லி படிகக்கல் - கரூரை அதிர வைத்த மோசடி

Update: 2024-04-26 10:32 GMT

கரூர் அருகே, மாணிக்க கல் வைத்திருப்பதாகக் கூறி, 150 கோடி ரூபாய் மதிப்பு என விற்பனை செய்து மோசடி செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். லட்சுமணன், மாணிக்கம், மணிவேல் ஆகிய 3 பேர் சேர்ந்து, தங்களிடம் மாணிக்கக் கல் இருப்பதாகக் கூறி, அதனை வாங்க இடைத்தரகர்கள் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்துள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போலீசார் மாணிக்கக் கல்லை பரிசோதித்தபோது, அது படிகக்கல் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட முயன்ற 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்