ஒரே நேரத்தில் மொபைலுக்கு வந்த 600 OTP.. அடுத்த நொடியே காணாமல் போன பணம் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-10-22 05:30 GMT

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் கணக்கிலிருந்து தவறுதலாக ஐந்தாயிரம் ரூபாய் சென்றுள்ளதாக, கடந்த மாதம் 19-ம் தேதி ஐவிஆர் அழைப்பு வந்துள்ளது. பரிவர்த்தனையை ரத்து செய்ய ஓடிபி எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதனை நம்பி ஜானகி ராமன் ஓடிபி எண்ணை பதிவு செய்தவுடன், அவரது கணக்கிலிருந்து சுமார் 5,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓடிபி எண்ணை பதிவிட அழைப்புகள் வர, சுதாரித்த அவர் பேடிஎம் சேவை மையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் திரும்ப செலுத்தப்படும் என சேவை மையம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில், பேடிஎம் பில் ரெகவரி என்ற குழு ஜானகி ராமனை பணம் கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், பணத்தை மீட்க அளித்த புகாரின் மீது பேடிஎம் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசில் புகாரளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்