"வியாபாரிகள் மாமூல் தராவிட்டால் தாக்கப்படுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாடு நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, லட்சக்கணக்கான குடும்பங்கள் சிறு வணிகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார். சிறு வணிகத்தை காக்க அதிமுக உறுதுணையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.