ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு - தீர்ப்பு கூற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2021-09-20 09:06 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 3ஆவது நீதிபதி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, 3ஆவது நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க கோரி, ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு கூற உயர்நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்