மின் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து.. மின் தளவாட பொருட்கள் எரிந்து சேதம்

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக அருகிலுள்ள சூர்யா நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-06-18 08:52 GMT
மின் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து.. மின் தளவாட பொருட்கள் எரிந்து சேதம்
 
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக அருகிலுள்ள சூர்யா நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது,. இந்நிலையில் பூட்டிக்கிடந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்திலிருந்து தீப்பிடித்து புகைமூட்டம் வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க போராடினார்,. தீ கட்டுக்குள் வராததால் பக்கவாட்டில் இருந்த சுவர்களை இடித்து தள்ளிவிட்டு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர். அதில் அங்கு இருந்த மின் தளவாட பொருட்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
Tags:    

மேலும் செய்திகள்