தமிழகத்தில் மேலும் 34,285 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 468 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.;
தமிழகத்தில் புதிதாக 34 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 468 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 28 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.