இட ஒதுக்கீடு குறித்த ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு வரவேற்பு - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை

இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தை வரவேற்பதாக திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-13 15:04 GMT
இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தை வரவேற்பதாக திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதுபோல், அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இந்திய  அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையின் கீழ் கொண்டுவர மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்