தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு
காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டளை பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.;
* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் காவல் நிலையம் வரும் புகார்தாரர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
* காவல் நிலையத்தில் கட்டாயம் கிருமி நாசினிகள் இருக்க வேண்டும் என்றும்,
* சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை வாகனங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
* வரும் 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம்
* என்பது உள்ளிட்ட 22 கட்டளை காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.