"வெங்காயம் விலை உயர்வு - நூதன ஆர்ப்பாட்டம்"

வெங்காய அணிகலன் அணிந்து வந்து ஆர்ப்பாட்டம்

Update: 2019-12-03 11:18 GMT
வெங்காய விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வெங்காயத்தை அணிகலன்களாக அணிந்து வந்த அவர்கள், அவற்றை அடகு வைக்க வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கியில் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்